அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Friday, December 18, 2015

தக்தீரின் வகைகள்

விதி பிரச்னையை விரிவாக எடுத்துக் கூறுமுன் இன்னொன்றையும் கூற விரும்புகின்றேன். அதாவது தக்தீர் பல வகைகளில் இருக்கிறது. அவற்றில் நான்கு வகையை மட்டும் கூறுகிறேன்.

இவை சாதாரண மக்களோடு தொடர்புடையவையாக இருப்பதால் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் அவற்றைப் புரிய வைக்கவும் முடியும்.

அவற்றில் ஒன்றுக்கு ‘தக்தீரே ஆம் தப்யீ’ என்று நான் பெயர் வைக்கிறேன்.

ஒவ்வொரு செயலையும் இறைவன் செய்ய வைக்கிறானா?

இந்த விதி விவகாரத்தால் என்ன பயன்? என்று அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை சிந்திக்கவில்லை. பயன் பெறுவதற்குப் பதிலாக நஷ்டமடையும் விதத்தில் அவர்கள் இந்த விவகாரத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் கூறுகின்ற வகையில் எவரெல்லாம் ஏற்றுக் கொள்வாரோ அவரெல்லாம் நஷ்டமே அடைவார்.

உதாரணமாக அவர்களில் ஒரு பிரிவினர், மனிதன் செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பதுதான் என்கின்றனர். இப்போது நாம் கேட்கிறோம்: இது சரியென்றால், ஒரு புறம் இறைவனே தீமையிலும் தீமையான

விதி விவகாரத்தின் மீது சொல்லளவில் நம்பிக்கை கொள்வது போதாது.

இது குறித்து நான் விளக்கப் போகுமுன் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியமென கருதுகிறேன். முஸ்லிம்கள் ‘விதி விவகாரத்தில்’ அதிகமாக ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். வெறும் விதியின் மீது நம்பிக்கை கொண்டால் மட்டும் போதும் என்று நினைத்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் அதனைப் புரிவதும், அறிவதும் மிக அவசியம். ஏனெனில் இறைவன் அதனை ஈமானின் ஒரு நிபந்தனையாகக் குறிப்பிடுள்ளான். நம்பிக்கை கொள்வதற்கு அது கட்டாய விதியாக இருப்பதால், அது நமக்கு பயனுள்ளது என்பதும் தெரிய வருகிறது. இல்லையாயின் அதன் மீது நம்பிக்கை கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்காது.